ஐரோப்பா

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஜேர்மனியில் ஒன்றுக்கூடிய மக்கள்!

காசாவில் பல இன்னல்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜேர்மனியில் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரிய போராட்டக்கார்கள் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மேலும் காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

பேர்லினின் நகர மையப் பகுதி வழியாக நடந்த பேரணியில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  போராட்டக்காரர்களைக் கண்காணிக்க சுமார் 1,800 சட்ட அமலாக்க அதிகாரிகள் களமிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்