ஐரோப்பா

ஸ்பெயின் மின்தடையால் சுப்பர் மார்க்டெ்களில் பதற்றத்துடன் பொருட்களை எடுத்துச் செல்லும் மக்கள்

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மிக மோசமான மின்தடையால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் பலரும் பதற்றப்பட்டுப் சுப்பர் மார்க்டெ்களில் அத்தியாவசியப் பொருட்களை முண்டியடித்துக்கொண்டு எடுத்து சென்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் அதைக் காட்டும் புகைப்படங்கள் பரவின. நீளமான வரிசைகளையும் காலியான அலமாரிகளையும் படங்களாக எடுத்து மக்கள் இணையத்தில் பதிவு செய்தனர்.

அத்தியாவசியப் பொருள்களில் தண்ணீர் போத்தல்களைத்தான் மக்கள் ஆக விரைவாக வாங்கினர்.

மின்சாரம் மீண்டும் திரும்பிவிட்டது. மின்தடை ஸ்பெயினில் தொடங்கியிருக்கலாம் என்று போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டனக்ரோ கூறினார்.

அதற்கு ஸ்பானியப் பிரதமர் பெட்ரொ சான்செஸ் மின்தடைக்கான காரணம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் காரணம் தெரியாதவர்கள் யார் மீதும் பழிசுமத்தக்கூடாது என்றும் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்