துருக்கியில் அதிக காற்றழுத்தத்தால் விபத்துக்குள்ளான பாரசூட் : ஒருவர் பலி, பலர் படுகாயம்!

மத்திய துருக்கியில் பாராசூட் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட காற்றின் மாற்றத்தால் பலூன் பாதிக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்சராய் மாகாணத்தில் உள்ள கோஸ்லுகுயு கிராமத்திற்கு அருகே தரையிறங்க முயன்ற போது விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பாரசூட் இன் விமானி உயிருள்ளதுடன் அதில் பயணித்த 19 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)