காஸாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச்சூடு: இஸ்ரேல் குற்றச்சாட்டு

வடக்கு காசாவில் மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மீது “ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காசா நகரில் “ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் உதவி வாகனங்களின் வருகைக்காக காத்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தினர்” பின்னர் “காசா மக்கள் கூட்டம் டிரக்குகளை கொள்ளையடிக்கத் தொடங்கியபோது தொடர்ந்து சுட்டனர்” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசா நகரில் வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை இராணுவம் தெரிவிக்கவில்லை, ஆனால் “ஏராளமான காசா பொதுமக்கள் டிரக்குகளால் மோதப்பட்டனர்” என்று கூறியுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)