இலங்கை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கைகொடுக்கும் கிரிக்கெட்; பாகிஸ்தான் தொடர் மூலம் நிதி சேகரிப்பு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் மூலம் கிடைக்கும் முழு வருமானத்தையும், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

‘டித்வா’ (Ditwah) புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மீட்பு மற்றும் புனர்வாழ்வுப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் தொடரின் போது #VisitSriLanka எனும் விசேட ஹேஷ்டேக் (Hashtag) பிரசாரத்தையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், எதிர்வரும் ஜனவரி மாதம் 7, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

விளையாட்டின் ஊடாக தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் கிரிக்கெட் சபை எடுத்துள்ள இந்த முயற்சிக்கு விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!