ஐரோப்பா செய்தி

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க் – கிரீன்லாந்து மட்டுமே தீர்மானிக்க வேண்டும்

கிரீன்லாந்தின் எதிர்காலத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவையென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், அரை தன்னாட்சி பெற்ற டேனிஷ் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைக்கலாம் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இந்த யோசனைக்கு கிரீன்லாந்தின் பிரதமரும் டென்மார்க்கின் பிரதமரும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த நடவடிக்கை ட்ரம்பின் கற்பனையென கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃபிரடெரிக் நீல்சன் [Jens-Frederik Nielsen] , தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், டேனிஷ் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க
அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என கூறியிருந்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!