இலங்கை

இணையவழி மோசடி: 50 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர்கள் இயங்கி வந்ததாக தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பொலிசார் அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐஎஸ்எம் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ததுடன் மேலும் ரூ. 10 லட்சம் ரூபாய் பணம். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!