இலங்கை

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் தொடர்ந்தும் பதவியில் இருந்தும் பயனில்லை என அவர் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் திரன் அலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என  அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகவில்லை என்றால், எதிர்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர பேச்சுவார்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!