ஆசியா

மடகஸ்காரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

மடகஸ்காரில் தண்ணீர் மற்றும் மின்வெட்டு தொடர்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மடகஸ்காரில் தொடர்ச்சியாக 12 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வணிகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இருப்பினும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்ட பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே மின் துண்டிப்பை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் வணிக நிறுவனங்களில் இருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதி நிரினா ராஜோலினாவுக்கு நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்ட அரசியல்வாதிகளின் மூன்று வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.

இந்த மக்கள் போராட்டம் மெல்ல மெல்ல வன்முறையாக உருவெடுத்து வருகின்றது. இதன் நிமித்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்