விளையாட்டு

இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

இலங்கை அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவேத் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலேயே இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது வரும் டி20 உலகக்கோப்பை தொடர் வரை மட்டுமே இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவேத் 1992-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

பயிற்சியாளர் பதவியை பொறுத்த வரை 2009-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார்.

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இயக்குனராகவும் உள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ