இலங்கை

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு கூட்டம்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்று (04) மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தொழிற்சங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டதையடுத்து புதிய நிர்வாகத் தேர்வும் இடம்பெற்றது.இன்றைய கூட்டத்தில் பின்வரும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக ஏ.எல்.எம். பாறூக், செயலாளராக பி.ரி. ஆதம்பாவா, பொருளாளராக கே. சசிதரன், உப தலைவராக எஸ். ஜாபீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாக சபை உறுப்பினர்களாக பி. தியாகராஜா, எச்.எம்.கே. ரஹ்மான், ஏ.அமலராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் ஆயுட்காலம் 3 வருடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்