இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய புதிய குழு நியமனம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்