இலங்கை

இலங்கை : தேர்தல் திருத்த சட்டமூலங்களை பரிசீலிக்க புதிய குழு நியமனம்!

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றை பரிசீலிப்பதற்காக குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சபாநாயகர் இன்று (21.08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” என்ற சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி 113(2),  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டவாக்க நிலைக்குழுவிற்கு மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி (டாக்டர்) சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, ஜானக வக்கம்புர, சாமர சம்பத் தசநாயக்க, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, மனோ கணேசன், இரான் விக்கிரமரத்ன மற்றும் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் ஆவர்.

அத்துடன், “பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 113(2)இன் பிரகாரம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டவாக்க நிலைக்குழுவிற்கு மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.

பவித்ராதேவி வன்னியாராச்சி, காஞ்சன விஜேசேகர, பிரமித பண்டார தென்னகோன், ரோஹன திஸாநாயக்க, அனுராத ஜயரத்ன, சந்திம வீரக்கொடி, மனோ கணேசன் மற்றும் இரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்