இலங்கை

இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நியமனம்

குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பி. எம். டி.நிலுஷா பாலசூரியவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் இல்லுக்பிட்டிய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பாலசூரிய, தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்றார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!