தேசிய புலனாய்வுப்பிரிவு தலைவர் ஓய்வு!
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, பாதுகாப்பு சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
60 வயதை எட்டிய நிலையில் அவர், பாதுகாப்பு அமைச்சில் தனது பணிகளில் இருந்து விலகியுள்ளார்.
இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய இந்த ஆண்டு ஜனவரியில் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் புலனாய்வு வலையமைப்பையும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
புதிய தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(Visited 3 times, 3 visits today)




