உலகம் செய்தி

அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பொட்டலம்! பலர் வைத்தியசாலையில்!

அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த சில ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொட்டலத்தில் அடையாளம் தெரியாத வெள்ளைப் நிற பொடி இருந்ததாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் விமானம், மற்றும் அதன் துணைக் கப்பல்கள் விமான தளத்தில் உள்ளன. மேலும் ஜனாதிபதி வழக்கமாக பயணங்களுக்கு புறப்படும் இடமும் இதுதான் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்த அதிகாரிகள், தற்போது வழக்கமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 6 times, 7 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!