100க்கும் மேற்பட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம்

அரசாங்கத்தால் நடத்தப்படும் தளத்தில் பாலியல் ரீதியாக வெளிப்படையான விவாதங்களில் ஈடுபட்டதற்காக 100க்கும் மேற்பட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் அறிவித்தார்.
இதன் மூலம் 15 நிறுவனங்களின் அதிகாரிகளின் பாதுகாப்பு அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) நிர்வகிக்கும் இந்த தளம், வகைப்படுத்தப்பட்ட விவாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டது, ஆனால் பாலின மாற்ற அறுவை சிகிச்சை குறித்த விவாதங்கள் உட்பட வெளிப்படையான உரையாடல்களுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை பழமைவாத ஆர்வலர் கிறிஸ்டோபர் ரூஃபோ ‘சிட்டி ஜர்னல்’ இல் வெளிப்படுத்தினார். இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, கப்பார்ட் சம்பந்தப்பட்டவர்களை நீக்க உத்தரவு பிறப்பித்தார், அவர்களின் செயல்கள் “மிகவும் மோசமான நம்பிக்கை மீறல்” மற்றும் தொழில்முறை தரங்களை மீறுவதாகக் குறிப்பிட்டார்.