கிழக்கு காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மரணம்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போர் மற்றும் பெருமளவிலான இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமம் வழியாக பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக பிராந்திய அதிகாரி பெர்னார்ட் அகிலி தெரிவித்தார்.
“இறந்தவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்”, மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
தெற்கு கிவுவின் மாகாண சுகாதார அமைச்சர் தியோஃபில் வாலுலிகா முசாலிவா, செய்தி நிறுவனத்திடம், வெள்ளம் காரணமாக சேவைகள் பற்றாக்குறை மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
(Visited 3 times, 1 visits today)