மெக்சிகன் குத்துச்சண்டை வீரர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது

மெக்சிகன் குத்துச்சண்டை வீரர் ஜூலியோ சீசர் சாவேஸ் ஜூனியர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டிலிருந்து விரைவாக நாடுகடத்தப்படுவதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெக்சிகன் குடிமகனான சாவேஸ், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதற்காக மெக்சிகோவில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் இருப்பதாக DHS தெரிவித்துள்ளது.
“ஜனாதிபதி டிரம்பின் கீழ், உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல” என்று DHS உதவிச் செயலாளர் டிரிசியா மெக்லாஃப்லின் குறிப்பிட்டுள்ளார்.
39 வயதான சாவேஸ் ஜூனியர், முன்னாள் மூன்று பிரிவு உலக சாம்பியன் ஜூலியோ சீசர் சாவேஸின் மகன். அவர் தனது தொழில்முறை குத்துச்சண்டை வாழ்க்கையை 2003 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான குலியாக்கன், சினலோவாவில் 17 வயதில் தொடங்கினார்.