ஐரோப்பா

ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வீட்டு வாடகை கணிசமான அதிகரிப்பை எட்டியுள்ளதாக பெர்லின் மேயர் கை வெக்னர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் கடுமையான வாடகைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு பெர்லின் மேயர் கை வெக்னர் மத்திய அரசிற்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“நாடு முழுவதும் வாடகை அதிகரிப்பு வரம்பு அறிமுகப்படுத்தப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என மேயர் செய்தித்தாளிற்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.

மேயரின் புதிய நிலைப்பாடு, தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உயரும் வாடகைக்கு அவரது பழமைவாதக் கட்சியின் பாரம்பரியமான அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது.

ஜெர்மனியின் தற்போதைய, நாடு தழுவிய வாடகை ஒழுங்குமுறைச் சட்டம் மூன்று ஆண்டுகளில் 20 சதவீதமாகவும், வாடகைச் சந்தை குறிப்பாக இறுக்கமாக இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் 15 சதவீதமாகவும் உயர்த்தப்படுகிறது.

ஆனால் இந்தச் சட்டங்கள் தற்போதுள்ள குத்தகைதாரர்களை சிறந்த முறையில் பாதுகாக்கின்றன. “தற்போதுள்ள வாடகையில் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், நகரத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு வாடகையை செலுத்த முடியாமல் பலர் சிரமப்படுகின்றனர்,” என மேயர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் பெர்லினில் வாடகை வீடு வாங்குபவர்களுக்கான முதல் மூன்று விலையுயர்ந்த ஜெர்மன் நகரங்களுக்குள் நுழைந்தது.

தலைநகரில் புதிய கட்டிடங்களுக்கு வாடகை கேட்பது, இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு சதுர மீட்டருக்கு 20 யூரோ வரம்பை மீறியது.

2014 ஆம் ஆண்டு இந்த கட்டணம் வெறும் 8,10 யூரோக்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 61 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்