ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு மிரட்டல் : பாரிசில் ஒருவர் கைது
																																		பாரிஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் தன்னைத் தானே வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த நபரை பிரெஞ்சு போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆனால் சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
காலை 11 மணியளவில் தூதரகத்திற்குள் அந்த நபர் ஒரு கையெறி குண்டு மற்றும் வெடிக்கும் உடையை எடுத்துச் செல்வதைக் கண்டதாக ஒரு பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.குறித்த சந்தேகநபர்.பின்னர் தூதரகத்தை விட்டு வெளியேறிய பின்னர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பரில் நடந்த சம்பவத்தில் ஈரான் துணைத் தூதரகத்திற்கு அருகே தீக்குளிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் அதே நபர் தான் என்று ஒரு போலீஸ் வட்டாரம் தெரிவித்தது.
பல சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த நபர் தூதரகத்தின் தரையில் கொடிகளை இழுத்துச் சென்றதாகவும், தனது சகோதரனின் மரணத்திற்கு பழிவாங்க விரும்புவதாகவும் Le Parisien செய்தித்தாள் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய பதட்டங்களுக்கு இந்தச் சம்பவம் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
        



                        
                            
