இலங்கை செய்தி

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெருமளவு குழந்தைகள் பாதிப்பு

நாட்டில் பெருமளவிலான சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதால், புரதச்சத்துள்ள போஷாக்கு உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

20,000 முன்பள்ளி சிறார்களுக்கு காலை வேளையில் பூரண உணவு வழங்குவது பாரிய சவாலாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அந்த குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வருடம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிச் சிறார்களுக்கும் காலை வேளையில் உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் 55,000 முன்பள்ளி சிறார்களை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை