இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை பற்றி கருத்து தெரிவித்த மைத்திரிபால

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி உதவியை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது எனவும், தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் தான் நாட்டை ஆட்சி செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மகாநாயக்க தேரர் மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினை எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

“நான் அந்த ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. இப்போது இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு தேவையில்லாத பிரச்னை எழுந்துள்ளது” என்றார்.

“அமைச்சரவையின் முடிவின் மூலம் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒப்பந்தத்தை கையொப்பமிட்ட பிறகு இறுதி செய்ய முடியும்” என்று அவர் கூறினார்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை