இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்து சிறப்பு வரப்பிரசாதங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ, தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேனவும் ஏற்கனவே தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்