உக்ரைனில் அமைதி காக்கும் ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்க ஸ்டாமர் தலைமையில் கூடும் தலைவர்கள்!

உக்ரைனில் அமைதி காத்தல் குறித்து விவாதிக்க சர் கீர் ஸ்டார்மர் இன்று (15.03) உலகத் தலைவர்களின் மெய்நிகர் கூட்டத்தை நடத்துவார்.
மேலும் “உறுதியான உறுதிமொழிகளுக்கான நேரம் இது” என்றும் அவர் கூறியுள்ளதாக டவுனிங் ஸ்டீரிட் தெரிவித்துள்ளது.
சுமார் 25 தலைவர்கள் இந்த அழைப்பில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அமைதி காக்கும் ஒப்பந்தம் தொடர்பில் அவர்கள் விரிவாக விவாதம் நடத்தவுள்ளனர்.
இதற்கிடையில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவைத் தொடர்ந்து அதிகரிக்குமாறும் பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் ரஷ்யா மீது நாடுகள் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டால் நீண்ட காலத்திற்கு ஒரு இறுதி சமாதான ஒப்பந்தத்தை ஆதரிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகறிது.