போர் பதற்றங்களுக்கு மத்தியில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிரதமர் ஸ்டார்மர்
மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், பிரதமர் ஸ்டார்மர் (Starmer) அவசர கோப்ரா(COBRA) குழுக் கூட்டத்தை நடத்தினார்.
சனிக்கிழமை காலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டன.
தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி இது முன்கூட்டிய தாக்குதல் நடவடிக்கை என இரு நாடுகளும் விளக்கம் அளித்தன.
இதற்கு பதிலாக, ஈரான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் பல பகுதிகள் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.





