இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சுமார் 3,000 உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இறுதியாக 2018ல் சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்

அனைத்து ஊதிய விகிதங்களிலும் விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.33,000 சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

இந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விமானங்கள் அல்லது விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் எந்தவித தடங்கலும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!