இந்தியா

இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன்? வெளியான தகவல்

இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை விருந்தினராக பங்கேற்க வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய குடியரசு தின விழாவில் (2024) தலைமை விருந்தினராகப் பங்கேற்க வருமாறு ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே, அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.

ஆனால், ஜோ பைடனின் இந்தியப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் உறுதியான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் க்வாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜோ பைடன் இந்தியாவுக்கு வருவார் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘க்வாட்’ உச்சி மாநாடு திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆலோசனை நடத்தி திகதி இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!