இலங்கை செய்தி

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ளஅரசாங்க வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் குழுவைச் சேர்ந்த 36 பேர் மே 17ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லவுள்ளார்.

இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் பணியாற்ற முடியும்.

தாதியர் பட்டம் அல்லது டிப்ளோமா மற்றும் பணி அனுபவம் உள்ள வல்லுநர்கள், அரசு தாதியர் பள்ளிகளில் பயிற்சி பெற்ற பின்னர் பணி அனுபவம் உள்ள தாதிகள் தாதியர் தொழிலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைகளை இலவசமாக அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதுடன் விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூர் தாதியர் சபை நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தகுதி வாய்ந்த தாதியர் தொழில் வல்லுநர்கள் இரண்டு வருட ஒப்பந்த காலத்திற்கு மாதாந்தம் மூன்றரை இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபா வரை சம்பளமாக பெற முடியும்.

நாட்டிற்குள் நுழைந்த பிறகு, வேலை தேடுபவர்களுக்கு ஒரு முறை 1000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் தங்குமிடத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் ஆட்சேர்ப்பு நிறுவனம் கூறியது.

விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூரில் உள்ள தாதியர் தொழிலை இலவசமாக அணுகுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன் www.emeraldislemanpower.com என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!