சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய எழுத்தாளரை விடுவிக்க அனுமதி
தேசிய ஒற்றுமையை சீர்குலைத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரெஞ்சு-அல்ஜீரிய(French-Algerian) எழுத்தாளர் பவுலெம் சான்சலுக்கு(Boualem Sansal) மன்னிப்பு வழங்குவதாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
81 வயதான நாவலாசிரியரின் வயது மற்றும் மோசமான உடல்நலம் காரணமாக அவரை விடுவிக்குமாறு ஜெர்மன்(Germany) ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்(Frank-Walter Steinmeier) வலியுறுத்தியதற்கு பின்னர் இந்த விடுவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில், மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, பவுலெம் சான்சால் மருத்துவ சிகிச்சைக்காக பெர்லினுக்கு(Berlin) அழைத்து செல்லப்பட்டுள்ளார்
பிராங்கோஃபோன்(francophone) வட ஆபிரிக்க இலக்கியத்தில் பரிசு பெற்ற பவுலெம் சன்சால் அல்ஜீரிய அதிகாரிகளை விமர்சித்தவர்களில் ஒருவர்.
1830 முதல் 1962 வரையிலான காலத்தில் பிரான்ஸ் அநியாயமாக மொராக்கோ(Morocco) பிரதேசத்தை அல்ஜீரியாவிற்கு மாற்றியதாகக் கூறிய ஒரு நேர்காணலுக்குப் பிறகு அவர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.





