இலங்கை

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக ஆரம்பம்

ஒன்பதாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க், யாழிற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,ஜேர்மன் கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், விழா இயக்குனர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த திரைப்பட விழா எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் திரையிடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபம், கலம், கார்கிர்ல்ஸ் சதுக்கத்தில் உள்ள றீகல் திரையரங்கில் நடைபெறவுள்ளன.

சுயாதீன திரைப்படக்கலைஞர்களை ஊக்குவிக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா இலங்கையில் இடம்பெறும் ஒரேயொரு சர்வதேச திரைப்பட விழாவாகும்.

இம்முறையும் பல சர்வதேச குறும்படங்களுடன் நம்மவர்களின் குறும்படங்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் நம்மவர்களின் திரைப்படங்களான மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு, ஈழவாணியின் லூசி, காரை சிவநேசனின் புஷ்பக27 ஆகியனவும் திரையிடப்படுகின்றன.

திரையிடல்களுக்கு சமாந்தரமாக துறைசார் விற்பன்னர்களால் சினிமாசார் பயிற்சி பட்டறைகளும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.-

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content