பொது இடங்களில் புர்கா அணிவதற்கு தடை செய்யும் சட்டமூலத்தை முன்மொழிந்துள்ள இத்தாலி!

இத்தாலியில் பொது இடங்களில் புர்கா அணிவதற்கு தடை செய்யும் சட்டமூலத்தை ஆளும் கட்சி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
கலாச்சார பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் கீழ், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள், கடைகள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் முகத்தை மறைக்கும் ஆடைகள் தடை செய்யப்படும்.
தடையை மீறுபவர்களுக்கு 2,600 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)