இலங்கை

இலங்கை முழுவதும் ஏறக்குறைய 30000 சிறுவர்கள் யாசகம் கேட்பதாக தகவல்!

நாடளாவிய ரீதியில் 20,000 முதல் 30,000 வரையிலான தெருவோரச் சிறுவர்கள் யாசகம் கேட்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் நிலைமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை வளர்ச்சியைக் காட்டுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் மற்றும் தரவுக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர்  வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் செய்த ஆய்வுகளில், 2019 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 15,000 பேர் இந்த குழுவில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

2019 க்குப் பிறகு, ஈஸ்டர் தாக்குதல், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை இருக்கலாம். இங்கு பல்வேறு வகையான குழந்தைகள் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுவர்களை பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும் என தேசிய சிறுவர் நலன்புரி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

(Visited 29 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!