அரசியல் இலங்கை செய்தி

எதிரணி ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது!

ஊடக நிறுவனங்கள்மீது தாக்குதல் நடத்தி அவற்றை கொளுத்தியவர்கள், இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது “சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Sundaralingam Pradeep தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையைக் கையாள்வதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“ கடந்த காலங்களில் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் கொளுத்தப்பட்டன.

இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.

எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்குரிய உரிமைகள் நிச்சயம் பாதுக்காக்கப்படும்.

ஊடக நிறுவனங்கள் உண்மையை எழுத வேண்டும். அவ்வாறு எழுதினால் அதற்கும் பயப்பட வேண்டியதில்லை.” – என்றார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!