இந்தியா

‘செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை ஆரம்பித்தது இஸ்ரோ நிறுவனம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் ‘செமி கிரையோஜெனிக் என்ஜின்’ (semi cryogenic) சோதனையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

இது எதிர்கால ஏவுகணைகளுக்கு சக்தி அளிப்பதாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனைக்கூடத்தில் புதன்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட அரை கிரையோஜெனிக் இயந்திரத்தின் இடைநிலை கட்டமைப்பின் முதல் ஒருங்கிணைந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

எதிர்கால ஏவுகணை தளங்களுக்கு பயன்படக்கூடிய திரவ ஒட்சிசன், மண்ணெண்ணெய் உந்துசக்தி கலவையினால் செயற்படும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான ஒரு படியாக இந்த சோதனை அமைந்துள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!