இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தீவிரம் – வெளியேறும் பாலஸ்தீனர்கள்

காஸா சிட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இஸ்ரேல் இராணுவ தாக்குதலை நடத்தியதையடுத்து இவ்வாறு மக்கள் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காஸா சிட்டிக்குள் நுழையும் காணொளியை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன.

ஹமாஸ் அமைப்பையும் அதன் நட்பு அமைப்புகளையும் துடைத்தொழிப்பதே நோக்கமென்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 400,000 பாலஸ்தீனர்கள் ஏற்கனவே காஸா சிட்டியிலிருந்து வெளியேறியிருக்கின்றர். போர் தொடங்கியிலிருந்து ஆக மோசமான தாக்குதல்கள் நேற்று இரவு நடத்தப்பட்டதாய்க் கூறப்பட்டது. அதில் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!