அரசியல் இலங்கை செய்தி

தலைநகரில் ஆட்டம் காண்கிறதா என்.பி.பி. ஆட்சி?

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் (Colombo Municipal Council) வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கொழும்பு மாநகரசபையின் (CMC) வரவு- செலவுத் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும் நிர்வாக நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.

உள்ளாட்சிசபைத் தேர்தல் (Local Government Election Act) சட்டத்தின் பிரகாரம் அடுத்த தடவை வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்கூட அடுத்தவருடம்வரை மேயரை மாற்ற வேண்டியதில்லை.

மூன்றாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் புதிய மேயரை தெரிவுசெய்ய வேண்டும். இதுவும் கொழும்பு மாநகரசபையில் எதிரணி தரப்புக்கு சவால்மிக்க விடயமாக அமையும். அதற்குரிய பெரும்பான்மை இல்லை.

எனவே, கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.” – என்றார் அமைச்சர் வசந்த சமரசிங்க.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!