ஆசியா செய்தி

துருக்கியில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யும் ஈராக்

ஒரு புதிய மின் பாதை துருக்கியில் இருந்து ஈராக்கின் வடக்கு மாகாணங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

115-கிலோமீட்டர் பாதையானது மொசூலுக்கு மேற்கே உள்ள கிசிக் மின்நிலையத்துடன் இணைகிறது மற்றும் துருக்கியில் இருந்து ஈராக்கின் வடக்கு மாகாணங்களான நினிவே, சாலா அல்-தின் மற்றும் கிர்குக் ஆகிய பகுதிகளுக்கு 300 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கை அண்டை நாடுகளுடன் இணைக்க புதிய வழி ஒரு “மூலோபாய” நடவடிக்கை என்று பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தெரிவித்தார்.

“இந்த பாதை இன்று செயல்படத் தொடங்கியது” என்று மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் மௌசா தெரிவித்துளளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!