சர்வதேச விமானங்களுக்காக மத்திய மற்றும் மேற்குப் வான்வெளியை திறந்த ஈரான்

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து சர்வதேச விமானங்களுக்கான அணுகலை ஈரான் விரிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும் நாட்டின் பெரும்பகுதியில் விமானக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“நாட்டின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு மேலான வான்வெளி இப்போது சர்வதேச விமானங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது,” என்று சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தெஹ்ரானின் மெஹ்ராபாத் மற்றும் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையங்கள் உட்பட நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் உள்ள விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அனைத்து சக குடிமக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது”.