IPL Match 38 – மும்பை அணிக்கு 177 ஓட்ட இலக்கை நிர்ணயித்த சென்னை

5 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மீண்டும் சந்தித்து வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்ககியது.
இந்த ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதைதொடர்ந்து, 177 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
(Visited 18 times, 1 visits today)