விளையாட்டு

IPL 2025 : கேப்டனாக மீண்டும் களமிறங்கும் விராட் கோலி?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை விராட் கோலி கேப்டனாக வழிநடத்திச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விராட் கோலி கேப்டனாக செயல்படப்போவது என்பது புதிதான விஷயம் இல்லை. இதற்கு முன்பு 2011 முதல் 2021 வரை பெங்களூர் அணியில் கேப்டனாக கோலி தான் செயல்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தங்கள் உரிமையால் வெளியிடப்படாத மிகச் சில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இதுவரை அவருடைய கேப்டன்சியில் நான்கு முறை பிளேஆஃப்களுக்கு சென்றுள்ளது.

2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் கேப்டனாக செயல்படவில்லை என விராட் கோலி அறிவித்த பின் தற்போது வரை டு பிளெசிஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த சுழலில், அணியை விராட் கோலி மீண்டும் வழிநடத்தினால் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவினை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இன்னும் இது குறித்து அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ இந்த தகவல் விராட் கோலி ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாகவும் அமைந்துள்ளது.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ