இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு இவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 இல் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மாகந்துர மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து முறையான விளக்கமளிக்கத் தவறிய நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது 72 மணிநேர தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய தினம் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலதிக துப்பாக்கிகள் எங்கே என்பது குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!