யானையின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி விவசாயி!!
திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர பகுதியிலுள்ள வீதியில் யானை தாக்கியதில் அப்பாவி விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அதே பகுதியில் வசித்து வரும் கித்சிறி விஜேயபிரியந்த(59வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா (26) பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
யானை தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருள் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு (25) 10.00 மணி அளவில் சென்றபோது வீதியில் நின்ற யானை அவரை அவ்விடத்தில் வைத்து தாக்கியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





