சிங்கப்பூர் தேவாலயத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளி நபர் கைது
ஒரு தேவாலயத்தில் தவறான பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததற்காக இந்திய வம்சாவளி சிங்கப்பூர்(Indian-origin Singaporean) நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேல் புக்கிட் திமா(Upper Bukit Timah) பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்(St Joseph) தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 26 வயதான கோகுலநந்தன் மோகன்(Gokulanandan Mohan) மீது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளில், அந்த நபர் தேவாலய வளாகத்திற்குள் ஒரு மேம்பட்ட வெடிக்கும் சாதனத்தை ஒத்த ஒரு சுயமாக தயாரிக்கப்பட்ட பொருளை வைத்து இந்த சம்பவத்தை நடத்தியதாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
மேலும், கோகுலநந்தன் தனியாகச் செயல்பட்டதாகவும், இந்த சம்பவம் மத ரீதியாக தூண்டப்பட்டதாகவோ அல்லது பயங்கரவாதச் செயலாகவோ இருந்ததற்கான எந்த ஆதாரமும் தற்போது இல்லை என்றும் சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மனநல மதிப்பீட்டிற்காக அவரை மூன்று வாரங்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், கோகுலநந்தனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, சிங்கப்பூர் டாலர் 500,000 (சுமார் USD386,757) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.





