ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் கடவுச்சீட்டு, அடையாள அட்டை பெற காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்

ஜெர்மனியில் அடுத்தாண்டு முதல் டிஜிட்டல் நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுவதால், கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை கட்டமாயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டு உட்பட முக்கிய ஆவணங்களை பெற அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே முதல், ஜெர்மன் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் குடியிருப்பாளர்கள் டிஜிட்டல் கடவுச்சீட்டு புகைப்படத்தை சமர்ப்பிக்க முடியும்.

கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை அமைப்பில் நிர்வாக நடைமுறையை குறைத்து டிஜிட்டல் மயமாக்கலை முன்னோக்கி செலுத்துவதே இதன் நோக்கமாகும்

ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையை விரைவாகப் பெறுவது மற்றும் நிர்வாக நடைமுறை குறைவாக இருக்கும். அதற்கமைய, பயோமெட்ரிக் கடவுச்சீட்டு புகைப்படங்கள் எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கப்படும், காகிதத்தில் புகைப்படங்கள் இனி அனுமதிக்கப்படாது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!