உக்ரைன் – ரஷ்ய போர் குறித்து நடைபெறும் முக்கிய கலந்துரையாடல் : ஒன்றிணையும் இருநாட்டு தலைவர்கள்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் பேரழிவுகரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்தம் மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தத்திற்கான பிரச்சாரத்தை வெள்ளை மாளிகை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதிகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் இன்று (18.03) இது தொடர்பில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் இது ஒரு மோசமான சூழ்நிலை, உக்ரைனிலும் இது ஒரு மோசமான சூழ்நிலை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நடப்பது நல்லதல்ல, ஆனால் நாம் ஒரு அமைதி ஒப்பந்தம், போர்நிறுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியுமா என்று பார்ப்போம், அதை நாம் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு கிரெம்ளின் உறுதியளிக்கத் தவறினால், அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.