இலங்கை

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ-பாஸ்போர்ட் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக வரிசைகள் அண்மையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அலஸ் தெரிவித்தார். 

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கொரிய அரசாங்கத்துடன் ஒரு முறையை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், நாட்டின் பல்வேறு துறைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார். 

புதிய தேசிய அடையாள அட்டைகளை (NIC) ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content