செய்தி விளையாட்டு

ஷகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்க ஐசிசி நடவடிக்கை

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த முகமது ரிஸ்வானை நோக்கி பந்தை அடித்த வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்க ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐசிசி ஷகிப்பிற்கு போட்டி கட்டணத்தில் 10% அபராதம் விதித்துள்ளது, இது அதன் நடத்தை நெறிமுறையில் ஒரு நிலை குற்றம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸின் 33வது ஓவரில் இந்த சம்பவம் நநடந்துள்ளது.

ஷகிப் பந்துவீச ஆரம்பித்ததும், ரிஸ்வான் துடுப்பெடுத்தாட தயாராக இருந்திருக்கவில்லை., உடனே அவர் கையில் இருந்த பந்தை விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த லிட்டன் தாயை நோக்கி வீசினார்

அது கிட்டத்தட்ட ரிஸ்வானின் முகத்தில் தாதாககும் வகையில் சென்றது.

இதற்கிடையில், இந்த போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசியதற்காக இரு அணிகளுக்கும் ஐசிசி அபராதம் விதித்தது.

இந்த போட்டி 2023-25 ​​டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் நடத்தப்பட்டதால், ஐசிசி அவர்களின் போனஸ் புள்ளிகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில், பாகிஸ்தான் 06 ஓவர்கள் குறைவாக வீசியதால், 06 புள்ளிகளும், பங்களாதேஷ் 03 ஓவர்கள் குறைவாக வீசியதால், 03 புள்ளிகளும் குறைக்கப்பட்டன.

மேலும் இரு அணிகளிடம் இருந்தும் பாகிஸ்தான் அணியின் போட்டி கட்டணத்தில் 30% மற்றும் பங்களாதேஷ் அணியின் போட்டி கட்டணத்தில் 15% அபராதமாக வசூலிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!