இலங்கை

இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு வீட்டுத்திட்டம் – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

நிறுவனங்களின் பாதுபாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

திருமணத்திற்குத் தயாராக உள்ளவையாகவும், நிலையான வீட்டு வசதி இல்லாதவராகவும் அடையாளம் காணப்பட்ட இளைஞர் யுவதிகளுக்குத் தலா ஒரு மில்லியன் நிதியுதவி வழங்க 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட பல துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

2015.06.30க்கு பின்னர் நிறுவனப் பாதுகாப்பிலிருந்து விடுபட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் தற்போது சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த நலத்திட்டத்தின் கீழ் உதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்