இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு வீட்டுத்திட்டம் – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

நிறுவனங்களின் பாதுபாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
திருமணத்திற்குத் தயாராக உள்ளவையாகவும், நிலையான வீட்டு வசதி இல்லாதவராகவும் அடையாளம் காணப்பட்ட இளைஞர் யுவதிகளுக்குத் தலா ஒரு மில்லியன் நிதியுதவி வழங்க 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட பல துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
2015.06.30க்கு பின்னர் நிறுவனப் பாதுகாப்பிலிருந்து விடுபட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் தற்போது சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த நலத்திட்டத்தின் கீழ் உதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.