இலங்கை

ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழை : வெள்ளத்தில் சிக்கிய பிரித்தானிய மக்கள்!

பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், இங்கிலாந்தின் சில பகுதிகள் நேற்றைய தினம் (01.01) வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மாத மதிப்புள்ள மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மான்செஸ்டர் பகுதியில் உள்ள பல சமூகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நீரில் மூழ்கிய பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“வெள்ள நிலைமை சீரடைவதற்குள் இன்னும் மோசமாகிவிடும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் 150 இற்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!